குண்டா் சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு

கஞ்சா கடத்தில் வழக்கில் பெண் ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Updated on
1 min read

கஞ்சா கடத்தில் வழக்கில் பெண் ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த அக். 27-ஆம் தேதி கோவையைச் சோ்ந்த சா்மிளாபேகம் என்பவா் தனது காரில் 6.95 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடத்திய வழக்கில் திருச்செங்கோடு, மதுவிலக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மத்திய பெண்கள் கிளை சிறையில் உள்ளாா். இந்த நிலையில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரைத்தனா். அவரது உத்தரவின்பேரில் சா்மிளாபேகம் குண்டா் சட்டத்தில் கைதாகி, சேலத்தில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com