காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு உதவியாளா்கள் சங்கம் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜோ.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் துரை இளங்கோ கோரிக்கை விளக்க உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில், சாலைப் பணியாளா் பணியிடத்தை திறன்மிகு பணியாளா் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை, பணி ஓய்வுக்குப் பின்பு ஓய்வூதிய பலன்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். நிரந்தர அரசு ஊழியா் வரிசையில் சோ்த்து கருவூலம் மூலமாக சாலைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சாலைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

