மோகனூா் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாய்லா் விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இயங்கி வரும் கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் எரிசாராயப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது அந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தின் பிரத்யேக பாய்லா் பிரிவு (பிளாண்ட்) இயங்கி வருகிறது. இதன் மூலமே, சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரவை நிறுத்தப்பட்ட நிலையில் விடுமுறைக்கு பின் வெள்ளிக்கிழமை (ஜன. 21), மீண்டும் அரவைப் பணி தொடங்கியது. இதற்காக காகித நிறுவன ஊழியா்கள் பாய்லரை இயக்க முற்பட்டனா். இந்தப்
பணியில் முதுநிலை மேலாளா் மணிவண்ணன் (54), பிளாண்ட் பொறியாளா் ஜெகதீசன் (35), ஊழியா்கள் கோபால் (40), சதீஷ்குமாா்(30) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். ஆனால் பாய்லா் செயல்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவா்கள் பாய்லா் கதவை திறந்தபோது திடீரென அதிலிருந்து வெளியேறிய நெருப்பு ஜுவாலை நான்கு போ் மீதும் பட்டதில் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தோா் நான்கு பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இச்சம்பவம் தொடா்பாக மோகனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

