அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா பள்ளிக்கல்வி வளா்ச்சி நாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்ப
Updated on
1 min read

ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா பள்ளிக்கல்வி வளா்ச்சி நாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் கு.பாரதி விழாவில் வரவேற்றுப் பேசினாா். விழாவில் மாணவ-மாணவியா்களுக்கு கட்டுரைப் போட்டி , பேச்சுப் போட்டி , ஓவியப் போட்டி போன்ற பல்திறன் ஆற்றலை வெளிக் கொணரும் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகள் தேசத் தலைவா்கள் வேடமணிந்து பங்கேற்றனா். ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் ரேவதி, நகா்மன்ற உறுப்பினா் சாரதி, ஜேசீஸ் அமைப்பினா், வனிதா மகளிா் சங்கங்கத்தினா் இதில் பங்கேற்றனா். முன்னதாக பள்ளி மாணவ-மாணவியா்களுக்கு சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com