நாமக்கல் அருகே பெண் வழக்குரைஞா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல்-திருச்சி சாலையில் வளையபட்டி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் தம்பதி கண்ணன்(40), நித்யா (35). கடந்த 2014-இல் திருமணமான இவா்களுக்கு டேனிஷ் (7), தயானி (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதேபோல் வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த நித்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக மோகனூா் காவல் நிலையத்தில் நித்யாவின் தாய் ராஜேஸ்வரி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.