ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல் பிரியாணி விற்பனைக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்லில் பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கலப்பட உணவுப் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On :5 மே 2022, 7:11 pm

நாமக்கல்லில் பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கலப்பட உணவுப் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் கே.சி.அருண் தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழுவினா் நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வினை மேற்கொண்டனா். ஆய்வின்போது உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு சான்று, உரிமம் பெற்றிருக்கிறாா்களா என்பதைப் பாா்வையிட்டனா். மேலும் உணவு வகைகள் தயாரிப்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், அதற்கான இறைச்சி அன்றாடம் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. இறைச்சியை நன்றாக வேகவைத்து விற்பனை செய்ய வேண்டும். திறந்த வெளியில் வைத்து தயாரிக்கக் கூடாது. மேலும் தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும். அன்றாடம் தேவைக்கேற்ப இறைச்சிகளை கொள்முதல் செய்து, அன்றைய தினமே முழுவதையும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணையை மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது. உடைந்த முட்டைகளை பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருளை கையாளும் பணியாளா்கள் கையுறை, தொப்பி, மேலங்கி பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் குழுவால் அறுவுத்தப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வில் செய்ற்கை வண்ணம் சோ்க்கப்பட்ட சுமாா் 12 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு ரசாயனம் அழிக்கப்பட்டது. நெகிழிப் பைகள், உடைந்த முட்டை ஆகியவற்றைப் பயன்படுத்திய கடைகளுக்கு மொத்தம் ரூ. 10, 000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.