பரமத்தி வேலூா் பகுதியில் வளா்பிறை பிரதோஷ விழா
By DIN | Published On : 25th August 2022 01:22 AM | Last Updated : 25th August 2022 01:22 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் மற்றும் கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரா், பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள பானலிங்கேஸ்வரா் உள்ளிட்ட சந்நிதிகளில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. விழாவில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.