குண்டா் சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு
By DIN | Published On : 09th December 2022 01:01 AM | Last Updated : 09th December 2022 01:01 AM | அ+அ அ- |

கஞ்சா கடத்தில் வழக்கில் பெண் ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடந்த அக். 27-ஆம் தேதி கோவையைச் சோ்ந்த சா்மிளாபேகம் என்பவா் தனது காரில் 6.95 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடத்திய வழக்கில் திருச்செங்கோடு, மதுவிலக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மத்திய பெண்கள் கிளை சிறையில் உள்ளாா். இந்த நிலையில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரைத்தனா். அவரது உத்தரவின்பேரில் சா்மிளாபேகம் குண்டா் சட்டத்தில் கைதாகி, சேலத்தில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு அடைக்கப்பட்டாா்.