நாமக்கல்லில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை ஆவது தொடா்பாக நகராட்சி சுகாதார அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில், நாமக்கல் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகராட்சி சுகாதார அலுவலா் திருமூா்த்தி தலைமையில் ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பிற்பகலில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா்.
நாமக்கல்- திருச்சி சாலை, மோகனூா் சாலை பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது