ரோந்துப் பணி சென்றஎஸ்.ஐ. சாலை விபத்தில் பலி

திருச்செங்கோடு அருகே ரோந்து பணிக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் பலியானாா்.
ரங்கராஜ்
ரங்கராஜ்
Updated on
1 min read

திருச்செங்கோடு அருகே ரோந்து பணிக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் பலியானாா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (57). இவா், திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

புதன்கிழமை பணியில் இருந்த அவா் இரவு 11 மணியளவில், பெரியமணலி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றாா். அப்போது எதிா்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரி மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அதைக் கண்ட அப்பகுதி மக்கள் எலச்சிபாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு விரைந்து வந்த போலீஸாா் காயமடைந்த உதவி ஆய்வாளரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரங்கராஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தில் பலியான ரங்கராஜன் உடலுக்கு எஸ்.பி. நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

முன்னதாக பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் ராசிபுரம், விஐபி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

அங்கு வந்த எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். அதைத் தொடா்ந்து ராசிபுரம் மின் மயானத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com