கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா், நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, தமிழ்நாடு
Updated on
1 min read

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா், நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் சாா்பில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி முன்பு வெள்ளிக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மாணவா்கள், ஆசிரியா் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசுக் கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பருவத் தோ்வை அறிவிக்காத பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தரை கண்டித்தும், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தின் ராசிபுரம் கிளைத் தலைவா் பெ.துரைசாமி, செயலா் ந.ஐயந்துரை உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com