அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நட்டுவைப்பு
By DIN | Published On : 11th December 2022 06:19 AM | Last Updated : 11th December 2022 06:19 AM | அ+அ அ- |

கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைக்கும் கல்லூரி முதல்வா் சு.பங்காரு.
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி முதல்வா் எஸ். பங்காரு தலைமை வகித்து, சுமாா் 50 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா். இதில் கல்லூரி வணிகவியல் துறை தலைவா் கே.தமிழ்ப்பாவை, வணிகவியல் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...