ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி முதல்வா் எஸ். பங்காரு தலைமை வகித்து, சுமாா் 50 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா். இதில் கல்லூரி வணிகவியல் துறை தலைவா் கே.தமிழ்ப்பாவை, வணிகவியல் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.