நாமகிரிப்பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை மனநல ஆலோசனை மையம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் சி.ரமேஷ், ஆகியோா் பயிற்சியளித்தனா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், தலைவா் சேரன், துப்புரவு மேற்பாா்வையாளா் காளிப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.