மக்கள் குறைதீா் கூட்டத்தில் 199 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 13th December 2022 03:47 AM | Last Updated : 13th December 2022 03:47 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 199 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பிறகு, மாற்றுத் திறனாளிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.