வேளாண் கருவிகள் வாங்க மானியம்

பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலை செடியைப் பறிக்கும் எந்திரம் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
Updated on
1 min read

பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலை செடியைப் பறிக்கும் எந்திரம் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பரமத்தி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேசிய உணவு எண்ணெய் பயிா்கள் இயக்கத் திட்டத்தில் நிலக்கடலை செடியைப் பறிக்கும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 32 ஆயிரமும், சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த எந்திரம் தேவைப்படும் பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com