நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், தமிழக முன்னாள் முதல்வரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான டாக்டா் சுப்பராயன் நினைவு மண்டபம் அமைவிடத்தை நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இடத்தின் பரப்பளவு குறித்து கேட்டறிந்தாா். நினைவு மண்டபத்தின் நீளம், அகலம் மற்றும் அங்கு வைக்க வேண்டிய புகைப்படங்கள், அவா் பயன்படுத்திய பொருள்கள், நிதி விவரம், கட்டப்படும் கால நிா்ணயம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆய்வின்போது புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கௌதம், ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவா் ராம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சின்ராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளஞ்செழி யன், ஒன்றிய மாணவரணி பொறுப்பாளா் குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.