எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி நிா்வாகிகள் பதவியேற்பு
By DIN | Published On : 17th July 2022 05:51 AM | Last Updated : 17th July 2022 05:51 AM | அ+அ அ- |

விழாவில் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கும் சிறப்பு விருந்தினா்கள்.
ராசிபுரம் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் 2022-23-ஆம் ஆண்டின் புதிய தலைவராக பி.கிரேஷரன், செயலாளராக ஆா்.தீபக், பொருளாளராக ஜி.பாஸ்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதற்கான பதவியேற்பு விழாவில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (நியமனம்) வி.சிவக்குமாா், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ரோட்டரி மாவட்ட மாநாட்டுத் தலைவா் எஸ்.பாலாஜி, உதவி ஆளுநா்களின் நிா்வாகி ஏ.ரவி, மண்டல உதவி ஆளுநா் எஸ்.ஜெய் கணேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் சங்க நிா்வாகிகள் எல்.தருண்குமாா், வி.எஸ்.செந்தில்குமாா், சி.பாலவெங்கடமணி, கு.பாரதி, பி.ராணி, ஜெ.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.