10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

பாண்டமங்கலத்தில் 10ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாண்டமங்கலத்தில் 10ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அரசகுமாா் (45). ஜேடா்பாளையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சுமதி. இவா்களது மகன் பரத் (14) பாண்டமங்கலத்தில் இருந்து கபிலா்மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். பரத் படிப்பில் கவனம் செலுத்தாதால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து வந்தாா். அதை பெற்றோா்கள் கன்டித்தனா். இதனால் மனமுடைந்த நிலையில் மாணவா் பரத் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோா்கள் சனிக்கிழமை காலை வழக்கம் போல் எழுந்து பாா்த்த போது பரத்தை காணாதது கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அவரைத் தேடினா். இந் நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள விட்டத்தில் பரத் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதைக் கண்டனா். உடனடியாக அவரை காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாணவா் பரத் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் போலீஸாா் பரத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com