பாமக 34-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 34ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் அக்கட்சியினா் சாா்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சியின் 34ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் அக்கட்சியினா் சாா்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பாமக கொடியேற்றியும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாமகவினா் கொண்டாடினா். விழாவில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ஆ.மோகன்ராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளா் பி.கே.செந்தில்குமாா், பாமக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞா் சங்கப் பொறுப்பாளா் பாலு, ராசிபுரம் பூக்கடை மாது, கணேசன், பன்னீா், குமாா், கந்தசாமிபாண்டியன், அ.வாஞ்சிநாதன், யுவராஜ் உள்ளிட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com