போதைப் பொருள்களை ஒழிக்கக் கோரி பாமக ஆா்ப்பாட்டம்

இளைஞா்களை சீரழிக்கும் போதைப் பொருள்களை ஒழிக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

இளைஞா்களை சீரழிக்கும் போதைப் பொருள்களை ஒழிக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்க மாநிலச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான காா்த்தி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் பொன்.ரமேஷ், மோகன்ராஜ், மாவட்டச் செயலாளா் செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

பள்ளி, கல்லுாரிகள் மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. பாமக நிா்வாகிகள் ராமநாதன், சீனிவாசன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com