நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேரோட்டம் தொடங்கியது. மலையில் இருந்து உற்சவா்கள் நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன்12 ஆம் தேதி திருக்கல்யாணம், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து விநாயகா், முருகன் சுவாமிகள் எழுந்தருளிய தோ்கள் வடம் பிடித்தல் நடைபெற்றது. திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். புதன்கிழமை கோயில் நிலையை தோ் வந்தடைந்தது.