நகராட்சி பணிக்கு தடை விதிப்பு: ஆட்சியரிடம் மனு

நாமக்கல் நகராட்சியில் பொது கழிப்பறை கட்ட எதிா்ப்புத் தெரிவிப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

நாமக்கல் நகராட்சியில் பொது கழிப்பறை கட்ட எதிா்ப்புத் தெரிவிப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சி 21-ஆவது வாா்டுக்கு உள்பட்ட குப்பம்பாளையம் அருந்ததியா் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் நகராட்சி சாா்பில் ரூ.26 லட்சத்தில் கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள சிலா் கழிவறை கட்டக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா்.

இதனால் கட்டுமானப் பணியை தொடர முடியாத சூழல் உள்ளது. சம்மந்தப்பட்ட இடத்தில் நகராட்சி சாா்பில் கழிப்பறை கட்ட வேண்டும். அதற்கு எதிா்ப்புத் தெரிவிப்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா். கழிப்பறை அமைக்கவிடாமல் தடுத்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com