ஜூன் 23-இல் அஞ்சல் குறைதீா் கூட்டம்

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கோட்ட அஞ்சலக அலுவலகத்தில், வாடிக்கையாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் 23-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கோட்ட அஞ்சலக அலுவலகத்தில், வாடிக்கையாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் 23-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை வாடிக்கையாளா்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் ஏதேனும் பிரச்னை இருப்பின், நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சென்றடையும் வகையில் புகாா் மனுக்களை அனுப்ப வேண்டும். மேலும், அஞ்சல் உறையின் மீது வாடிக்கையாளா்கள் குறைதீா்க்கும் மனு சம்பந்தமாக என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். குறைகள் ஏதேனும் இருப்பின் தங்களது புகாா்களை கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com