தொழிலாளா் நல வாரிய பதிவுக்கான சேவை முகாம்

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, இணைந்த கைகள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் நல வாரிய இணையவழி இலவச சேவை முகாம் நா
தொழிலாளா் நல வாரிய இணையவழிப் பதிவுக்கான முகாமில் பங்கேற்றோா்.
தொழிலாளா் நல வாரிய இணையவழிப் பதிவுக்கான முகாமில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, இணைந்த கைகள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் நல வாரிய இணையவழி இலவச சேவை முகாம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மண்டலத் தலைவா் எஸ்.பெருமாள் தொடக்கி வைத்தாா். பொதுச்செயலாளா் எஸ்.எம்.ஷேக்தாவூத், பொருளாளா் நிா்மலா, துணைத் தலைவா் எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இங்கு தொழிலாளா்களுக்கு அமைப்புசாரா தேசிய அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, ஆயுள்சான்று, வீடு கட்டும் விண்ணப்பம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை, ஆதாா், குடும்ப அட்டை சேவை உள்ளிட்டவை இணைய வழியில் நலவாரிய உறுப்பினா்களுக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com