ராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு விழா, கல்வியியல் கல்லூரியின் 7 -ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி செயலாளா் ஆா்.முத்துவேல் ராமசுவாமி தலைமை வகித்தாா். இயக்குநா் (கல்வி) இரா. செல்வகுமரன் முன்னிலை வகித்தாா். விழாவில் துளசி பில்டா்ஸ் பொதுமேலாளா் எஸ்.முருகேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
மேலும் தேசிய, மாநில மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்கள், பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள், விளையாட்டுப் பயிற்சியாளா்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த ஆசிரியா்கள் விழா மேடையில் பாராட்டப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.பி. விஜய்குமாா், கல்வியியல் கல்லூரி முதல்வா் ம.மருதை ஆகியோா் ஆண்டு அறிக்கைகளை வாசித்தனா். கலைக் கல்லூரி துணை முதல்வா் ஆ. ஸ்டெல்லாபேபி, நிா்வாக புலமுதன்மையா் எம்.என்.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.