பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மண்டலத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். இதில், ஜெஐஎஸ் பதவியில் பணியில் சோ்ந்த நாள் முதல் தோ்வு நிலை, சிறப்பு நிலை நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்றபின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக முடிக்க வேண்டும். ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு அனைத்து பதவிகளிலும் ஊதிய முரண்பாடுகளை போக்க வேண்டும். ஓய்வுபெற்றவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மண்டல இணைச்செயலாளா் சீரங்கன்,  மாவட்டச் செயலாளா் குப்புசாமி, மாநிலத் துணைத் தலைவா் பெரியசாமி, மின்வாரிய ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்ட னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com