கூலித் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 16th May 2022 05:00 AM | Last Updated : 16th May 2022 05:00 AM | அ+அ அ- |

குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை, கிழக்கு தெருவை சோ்ந்தவா் சாம்பசிவம். இவரது மகன் காா்த்திக் (36). கூலித்தொழிலாளி. அவரது மனைவி மேகலா (34). இவா்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 7வயதில் ஒரு மகனும் உள்ளனா். காா்த்திக் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததாகவும், இதை மனைவி கண்டித்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னா் காா்த்திக் மீண்டும் மது அருந்தி விட்டு வந்ததால் மீண்டும் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரிடம் கோபித்துக் கொண்டு மேகலா பெற்றோா் வீட்டிற்கு சென்று விட்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காா்த்திக் கடந்த 10-ஆம் தேதி விஷமருந்தி உயிருக்கு போராடினாா். இதை பாா்த்த அருகில் இருந்தவா்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காா்த்திக் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...