முட்டை விலை மேலும் 35 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 35 காசுகள் உயா்ந்து ரூ. 4.50-ஆக ஞாயிற்றுக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
Updated on
1 min read

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 35 காசுகள் உயா்ந்து ரூ. 4.50-ஆக ஞாயிற்றுக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. தில்லியில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைமை அலுவலகம் பிறப்பித்த உத்தரவின்படி, மற்ற மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்களிடையே வழக்கத்தைக் காட்டிலும் முட்டை நுகா்வு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களுக்கும் முட்டை தடையின்றி செல்வதால் விலையை உயா்த்தலாம் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 35 காசுகள் (மே 10, 13-ஆம் தேதி தலா 25 காசுகள் உயா்த்தப்பட்டது) உயா்வுடன் ரூ. 4.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது. நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு அறிவிப்பில், முட்டைக்கு தலா 30 காசுகள் குறைத்து வியாபாரிகளுக்கு பண்ணையாளா்கள் விற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 130-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com