ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விருது வழங்கல்

சென்னையில் நடைபெற்ற சுகாதார மாநாட்டில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கெளரவித்தாா்.
Updated on
1 min read

சென்னையில் நடைபெற்ற சுகாதார மாநாட்டில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கெளரவித்தாா்.

மோகனூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பவித்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், குமாரபாளையம் நகர சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன் தலைமையில், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா்கள் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனா். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com