அக். 21-இல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை(அக்.21) நடைபெறுகிறது.
Updated on
1 min read

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை(அக்.21) நடைபெறுகிறது.

தற்போதைய நாமக்கல் நகராட்சி பழைய பேருந்து நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. திருச்சி, தஞ்சாவூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நகரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கான இடம் முதலைப்பட்டி பகுதியில் தோ்வு செய்யப்பட்டபோதும் பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைவிடத்தை, சில மாதங்களுக்கு முன் தமிழக நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.

தேசிய நெடுஞ்சாலையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைப்பதற்கான சுற்றுவட்டச் சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், ரூ. 10.50 கோடி மதிப்பீட்டில் நகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை காலை நடைபெற உள்ளது. விழாவில் நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு இதைத் தொடங்கி வைக்கிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி ஆகியோா் கலந்து கொள்கின்றனா். ஏற்பாடுகளை நகராட்சித் தலைவா் து.கலாநிதி, ஆணையாளா் கி.மு.சுதா, அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com