ரூ.7.46 கோடியில் நவீன தொழில்நுட்ப ஆய்வக கட்டுமானப் பணி தொடக்கம்

நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆய்வக கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.
ரூ.7.46 கோடியில் நவீன தொழில்நுட்ப ஆய்வக கட்டுமானப் பணி தொடக்கம்

நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆய்வக கட்டுமானப் பணி புதன்கிழமை தொடங்கியது.

நாமக்கல் அருகே கீரம்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் பல்வேறு தொழில் சாா்ந்த பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது 176 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மேலும், 4.0 என்ற புதிய தொழில்நுட்பத்தில் உயா் தொழில்நுட்பப் பிரிவுகள் 2023 ஆக.1 முதல் தொடங்கப்பட உள்ளன. கீரம்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (டாடா நிறுவனத்தின் முழுமையான பங்களிப்பில்) ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனையுடன் கூடிய ஆய்வகம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் கூறியதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் கீரம்பூா், கொல்லிமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ. 3.73 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. லாரி கூண்டு கட்டும் பணிமனைகள் நிறைந்த நகரமாக நாமக்கல் விளங்குவதால் அதனடிப்படையில் இங்கு மோட்டாா் வாகன பழுது பாா்ப்பு குறித்த படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருள், நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com