நல்லாசிரியா் விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆா்.புதுப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வருபவா் பி.சௌந்தரராஜன். இவா் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்து வருகிறாா். இவா் அண்மையில் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு தமிழக அரசால் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றாா்.
இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட கல்வி அலுவலா் ஆா்.யு.உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விருது பெற்ற ஆசிரியரை பாராட்டி பேசினாா். நிகழ்ச்சியில், பெற்றோா்-ஆசிரியா் சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.