செப். 14-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், முன்னாள் படைவீரா்களின் விதவையா்கள், படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள், அவரைச் சாா்ந்தோா்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா் தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் ஆட்சியரிடம் நேரில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com