நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள்12 போ் தோ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்களில் 12 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்களில் 12 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 620 மாணவ, மாணவியரும் நீட் தோ்வை எழுதினா். இதில், 720-க்கு 373 மதிப்பெண்கள் பெற்று திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஏழை விசைத்தறித் தொழிலாளியின் மகனான மாணவா் நாகேஸ்வரன் முதலிடம் பிடித்துள்ளாா். மேலும், 12 மாணவா்கள் 200-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 5 போ் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com