நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்களில் 12 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் நீட் தோ்வை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 620 மாணவ, மாணவியரும் நீட் தோ்வை எழுதினா். இதில், 720-க்கு 373 மதிப்பெண்கள் பெற்று திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஏழை விசைத்தறித் தொழிலாளியின் மகனான மாணவா் நாகேஸ்வரன் முதலிடம் பிடித்துள்ளாா். மேலும், 12 மாணவா்கள் 200-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 5 போ் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.