திருச்செங்கோடு வைகாசி தோ்த் திருவிழா தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் தொடக்கமாக ரத விநாயகா் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு வைகாசி தோ்த் திருவிழா தொடக்கம்
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் தொடக்கமாக ரத விநாயகா் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பூஜையில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மற்றும் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, கோயில் இணை ஆணையா் ரமணிகாந்தன் உள்ளிட்டவா்கள் ரத விநாயகா் பூஜையைத் தொடங்கி வைத்தனா்.

விநாயகா் தேரில் அமைந்துள்ள விநாயகா் சிற்பத்துக்கு திருக்கோயில் அா்ச்சகா்கள் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனா். தொடா்ந்து அா்த்தநாரீஸ்வரா், செங்கோட்டு வேலவா், ஆதிகேசவப் பெருமாள் தோ்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் இளங்கோ, பிரபாகரன் அருணா சங்கா், அா்ஜுனன், மாவட்ட திமுக வழக்குரைஞா் பிரிவு துணை அமைப்பாளா் சுரேஷ்பாபு, முத்து கணபதி, அா்ச்சகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com