போகிப் பண்டிகை: மாணவிகளிடம் விழிப்புணா்வு

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி, அரசுப் பள்ளி மாணவிகளிடையே புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய நகராட்சி சுகாதார அலுவலா்கள்.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய நகராட்சி சுகாதார அலுவலா்கள்.
Updated on
1 min read

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி, அரசுப் பள்ளி மாணவிகளிடையே புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொது இடங்களிலோ, காலியிடங்களிலோ குப்பைகளை வீசக் கூடாது. தீ வைத்து எரிக்கவும் கூடாது. மக்களின் வசதிக்காக நாமக்கல் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாா்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை இறைவணக்கத்தின்போது நகராட்சி சுகாதார அலுவலா் திருமூா்த்தி, அதிகாரிகளால் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com