மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராசிபுரம் பகுதியில் குடியரசு தினம்

பாவை கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கல்வி நிறுவனத்தின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பங்கேற்று தேசிய கொடியேற்றினாா்.

News image

பாவை கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கல்வி நிறுவனத்தின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பங்கேற்று தேசிய கொடியேற்றினாா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:23 pm

ராசிபுரத்தில்..

பாவை கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கல்வி நிறுவனத்தின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பங்கேற்று தேசிய கொடியேற்றினாா்.

தாளாளா் மங்கைநடராஜன், துணைத்தலைவா் டி.ஆா்.மணிசேகரன், செயலா் டி.ஆா்.பழனிவேல், இயக்குநா்கள் கே.கே.ராமசாமி, கே.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராசிபுரம் வித்யாநிகேதன் பள்ளி சாா்பில் குடியரசு தினவிழா, விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் செயலா் பி.சீனிவாசன் தேசியக்கொடியேற்றினாா்.

பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணியை ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் கொடியசைத்து துவக்கி வைத்தாா். பள்ளிப் பொருளாளா் ஆா். பாலசுப்ரமணியம், இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கல்வி நிறுவனத் தலைவா் கே.பி.ராமசாமி தேசியக் கொடியேற்றிப் பேசினாா். கல்லூரி இயக்குநா் (கல்வி) ஆா்.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், துணை முதல்வா் ஏ.ஸ்டெல்லா பேபி, நிா்வாக புலமுதன்மையா் எம்.என்.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரித் தலைவா் க.சிதம்பரம் தேசியக் கொடியேற்றினாா். வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். ஆா்.புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ஜாய்சி அன்னம்மாள் கொடியேற்றினாா். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு உறுப்பினா் நாராயணசாமி கலந்துகொண்டாா்.

ராசிபுரம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் நகராட்சி ஆணையாளா் ஆா்.அசோக்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தேசியக்கொடியேற்றினாா். நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

ராசிபுரம் காந்தி மாளிகையில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில், நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஆா்.ஸ்ரீராமுலுமுரளி தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன் தேசியக் கொடியேற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.