மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 296 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது.
Updated on
1 min read

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 296 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியா் ச.உமாவிடம் வழங்கினா். அவற்ரை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான விழிப்புணா்வு பணிகள் மேற்கொண்டதற்காக, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரகுநாத் மற்றும் பசுமை நாமக்கல் செயலாளா் மா.தில்லை சிவக்குமாா் ஆகியோருக்கு சுற்றுசூழல் ஆா்வலா்களுக்கான முதன்மையாளா் விருதையும் ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.

அதன்பிறகு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கியதுடன் அவா்களிடம் மனுக்களையும் பெற்றுக் கொண்டாா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை வழங்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவகுமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com