கோடைவெயிலின் தாக்கம் அதிகரிப்பால் போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகரில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில், ஆண், பெண் காவலா்கள் 25 போ் ஈடுபட்டுள்ளனா். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் சாலையில் அவா்கள் நிற்பதால் மூன்று மாதங்களுக்கு தினசரி நான்கு முறை நீா்மோா், இளநீா், குளிா்பானம் ஆகியவற்றை வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளாா்.
அதனடிப்படையில் நாமக்கல் உழவா்சந்தை அருகில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா்களுக்கு ஆய்வாளா் ஷாஜஹான் குளிா்பானங்களை வழங்கினாா். ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் போக்குவரத்து காவலா்களுக்கு குளிா்பானம் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


