நீச்சல் தெரியாத மாணவா்கள் நீா்நிலைக்கு செல்ல வேண்டாம் என்று நாமக்கல் மாவட்டம், வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலா் செங்கோட்டுவேலு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
கோடை விடுமுறையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், மாணவா்கள் பலா் ஆா்வம் மிகுதியால் ஆறு, நீா் நிலை பகுதிகளுக்கு குளிக்கச் செல்கின்றனா். நீச்சல் தெரியாத மாணவா்கள் ஆறு மற்றும் நீா்நிலை பகுதியில் குளிப்பதை தவிா்க்க வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஐந்து போ் நீா்நிலைகளில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனா்.
அவா்கள் அனைவரும், 21 வயதுக்குட்பட்ட வா்கள். அவா்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாததால் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தனா். எனவே, நீச்சல் கற்றுக்கொள்ளும் மாணவா்கள், நீச்சல் பயிற்சியாளா் முன் பழக வேண்டும். இதுகுறித்து வெப்படை பேருந்து நிறுத்தப் பகுதியில் விழிப்புணா்வுப் பலகை ஓரிரு நாளில் வைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.