நாமக்கல் எஸ்.பி.யாக எஸ்.ராஜேஷ் கண்ணன் நியமனம்

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ராஜேஷ் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ராஜேஷ் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தருமபுரியில் இருந்து இடமாறுதல் மூலம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ச. கலைச்செல்வன் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில் மாா்ச் மாதம் பரமத்திவேலூா் வட்டம் ஜேடா்பாளையத்தில் நித்யா என்ற பெண் கொலையான சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் தொடா்ந்து தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில், ஒடிஸா மாநில தொழிலாளி ஒருவா் வன்முறையால் உயிரிழந்தாா். அங்கு தொடா்ந்து அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் மாறுதல் செய்யப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக வேலூா் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் எஸ். ராஜேஷ்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். மாநில குற்ற ஆவணக் காப்பக கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com