38,310 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

ஜேடா்பாளையம் கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 38,310 கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜேடா்பாளையம் கரும்பு ஆலையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
ஜேடா்பாளையம் கரும்பு ஆலையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

ஜேடா்பாளையம் கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 38,310 கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்புத் துறை) பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா், வட்டாட்சியா் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள் குழு ஜேடா்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் 21 ஆலைகளில் நடைபெற்ற ஆய்வில் வேதிப்பொருள்கள் கொண்டு நாட்டுச் சா்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006-இ-ன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், 38,310 கிலோ கலப்பட வெல்லம், நாட்டுச் சா்க்கரை, 3,725 கிலோ சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com