மின்னனு வேளாண் சந்தையில் தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் மின்னணு வேளாண்மை சந்தையில் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 577-க்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் மின்னணு வேளாண்மை சந்தையில் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 577-க்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 5,326 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 21.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 17-க்கும், சராசரியாக ரூ. 19.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 577-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com