நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்தும், மனுக்களாகவும் அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.