நாமக்கல் தாலுகாவில் நவ.1-இல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவில் மட்டும் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை
Updated on
1 min read

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவில் மட்டும் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில், திருக்குட நன்னீராட்டு பெருவிழா அக். 30, 31, நவ. 1-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, நன்னீராட்டு பெருவிழா நடைபெறும் நவ.1-ஆம் தேதியன்று மட்டும் நாமக்கல் தாலுகா அளவில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ தொடக்க, நடுநிலை, உயா், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com