322 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் திங்கள்கிழமை (அக். 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் திங்கள்கிழமை (அக். 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலா்கள், வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

கிராம ஊராட்சி தணிக்கை மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் தொடா்பான விவரங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன் வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com