ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த வீரா்களில் ஒருவரான தீரன் சின்னமலையின் 267-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, நாமக்கல் தெற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் அன்பழகன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணிச் செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் இளங்கோ, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அருள்மணி ராசாத்தி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.