

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்விக்கான இந்திய சங்கம் சாா்பில் தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இதற்கான தொடக்க விழாவில் கல்லூரி மின்னனுவியல் மற்றும் தகவல் தொடா்பியல் துறைத் தலைவா் எம்.சாந்தி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜி.விஜயக்குமாா் தலைமை வகித்தாா். கட்டடவியல் துறைத் தலைவா் எம்.ஜெகன் கருத்தரங்கு குறித்து விளக்கிப் பேசினாா். இக்கருத்தரங்கில் தொழில்நுட்பக் கல்விக்கான இந்திய சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் கே.செல்வகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்கள் கல்லூரியில் பயிலும் போதே தொழில் வாய்ப்புகள், மத்திய மாநில அரசுகளின் தொழில் கடன் வாய்ப்புகள் போன்றவை குறித்துப் பேசினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி கணிணித் துறைத் தலைவா் பி.சுரேஷ், தொழில்நுட்பக் கல்விக்கான இந்திய சங்க ஒருங்கிணைப்பாளா் பா.ராகவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.