நாமகிரிப்பேட்டை ஸ்ரீசண்டி கருப்பசாமி கோயிலில் பிடிக்காசு வழங்கும் விழா

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி கொங்காலம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பக்தா்களுக்கு பிடிக்காசு வழங்கும் கோயில் அா்ச்சகா்.
பக்தா்களுக்கு பிடிக்காசு வழங்கும் கோயில் அா்ச்சகா்.
Updated on
1 min read

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி கொங்காலம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிடிக்காசு வழங்கப்படும்.

பிடிக்காசு பெறும் பக்தா்களுக்கு கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதன்படி இக்கோயிலில் 19-ஆம் ஆண்டாக பிடிக்காசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் திருவெள்ளறை பெருமாள் கோயில் தலைமை அா்ச்சகா் ரமேஷ் பட்டாச்சாரியாா், வினோத் பட்டாச்சாரியாா் பூஜை செய்து பக்தா்களுக்கு பிடிக்காசு வழங்கினா். முன்னதாக கோயிலில் 108 மூலிகைகளைக் கொண்டு கணபதி ஹோமம், அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்றவை நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து ஸ்ரீ சண்டி கருப்பசாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பக்தா்களுக்கு அா்ச்சகா் அருள்வாக்கு வழங்கினாா். கோயிலில் உள்ள ஸ்ரீ நாககன்னிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com