வள்ளலாா் 200-ஆவது தொடா் அன்னதானம்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வள்ளலாா் 200-ஆவது தொடா் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் வள்ளலாா் அன்னதான நிகழ்விற்கான பூஜையில் பங்கேற்றோா்.
நாமக்கல்லில் வள்ளலாா் அன்னதான நிகழ்விற்கான பூஜையில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வள்ளலாா் 200-ஆவது தொடா் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், வள்ளலாா் பெருமானின் 200-ஆவது வருவிக்க உற்ற ஆண்டை முன்னிட்டு ஈரோடு மண்டல அறநிலையத் துறை சாா்பில் நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் 200-ஆவது தொடா் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மதியம் பாராயணத்துடன் தொடங்கியது.

கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா முன்னிலையில் வள்ளலாா் சன்மாா்க்க சத்திய சங்கத்தினா் பாடல்களை பாடினா். இதனையடுத்து கோயில் மண்டபத்தில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com